![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-tqMQ4D-2NkL1f9Yk349kVhrcq90nVzZMNqsaahu4gOt6Csb4bdPrOyJ25kvGvqMFz6O6aqIsEG1fY8lnfxFnQ2kULkn6sLE_YH6rHpcCbm41KT21LSyk2CBZxFqTTZLyAGvc37xD660/s400/10_05_2010_015_008_001.jpg)
Monday, May 10, 2010
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் நினைவு நாள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-tqMQ4D-2NkL1f9Yk349kVhrcq90nVzZMNqsaahu4gOt6Csb4bdPrOyJ25kvGvqMFz6O6aqIsEG1fY8lnfxFnQ2kULkn6sLE_YH6rHpcCbm41KT21LSyk2CBZxFqTTZLyAGvc37xD660/s400/10_05_2010_015_008_001.jpg)
Saturday, May 8, 2010
ஜாதிவாரி கணக்கெடுப்புvywa ஆதரவு.,
அரசு எடுக்கும் கணக்கெடுப்பே இறுதியானது.அதன்பின்பே நாங்கள் முடிவெடுக்க இயலும்என்கிறார்கள்.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள நீதிபதிகள் என்ன சொல்லு-கிறார்கள்?
1931க்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் நிலையில் எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் அளிக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் வினா தொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கப்போவதில்லை என்பதில் சமூகநீதிக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் இருப்பதாகவே தெரிகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவிகிதம் என்ற கணக்குத் தெரிந்துவிட்டால், இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் மேலும் உயர்ந்துவிடுமே என்ற அச்சம் உயர்ஜாதி வட்டாரத்தை உலுக்குகிறது.
50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற தீர்ப்பும் அடிபட்டுப் போகக்கூடும் என்பதால் உயர்ஜாதி ஆளும் வட்டாரம்-_ நிருவாக வட்டாரம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாக நினைக்க நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
இதனை எதிர்த்து சமூகநீதியாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்-புக்குக் கீழும்வரும் என்றும் எச்சரிக்கிறோம்.
ஆகவே பிற்பட்ட வகுப்பினருக்காக குரல் கொடுக்கும் திராவிடர் கழகத்தின் முடிவை நாம் ஆதரிப்போம்.
மஞ்சள் நீராட்டு விழா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWAN39w-5K-GyWPZJdT4KoTGgbaQsSEE-jAUk5jHhkA-8x4QSSEhZSRGG6JuAQSKBVvIePT_h4bTkrltGyNfFSB_FFpy8PdY2-_kgQe9DBLKZLFAEpHyvRUYQzPjJZdkdCCX_td0ktRLo/s400/DSC_0925.jpg)
Wednesday, May 5, 2010
ஆர் கே எஸ் பற்றி அண்ணா கூறிய ஒரு சம்பவம்
சமுதாய மாற்றம் என்பது எவ்வளவு பெரிய அளவுக்கு இன்றைக்கு எளிதாக வந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னாலே எவ்வளவு சங்கடத்தோடு இருந்தது என்பதற்கு அண்ணா அவர்கள் ஒரு சாட்சியத்தை, ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறார்கள், அந்தப் பொதுக்கூட்டத்திலே.
அண்ணா பேசுகிறார் கேட்போம். மதத்துறையிலே மக்கள் மறுமலர்ச்சி பெற உழைக்க வேண்டும். இது சமயம் மத மமதை ஒன்று என் நினைவிற்கு வருகிறது.
கொச்சி திவான் வீட்டில் அண்ணா
1937ஆம் ஆண்டு நமது சர்.சண்முகம் (ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டுவிழா) கொச்சித் திவானாக கொலு வீற்றிருந்தபொழுது நடந்த சம்பவம் அது. நானும் இன்னும் சிலரும் (அண்ணா அவர்களும், மற்ற நண்பர்களும்) கொச்சிக்குப் போய் கோவை கோமான் வீட்டில் தங்கினோம். (திவான் வீட்டிலே தங்கியிருக்கின்றார்கள்).
மாலையில் அவருடைய மோட்டார் காரிலேயே கோயிலுக்குச் சென்றோம். (குருவாயூர் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதில் என்ன சிறப்பு என்பதற்காகப் பார்க்கச் செல்லுகிறார்கள்.) அவர் (திவான்) உடன் வரவில்லை. எங்களை கோவிலுக்குள்ளே விட நம்பூதிரி மறுத்தார். நாங்கள் திவான் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறி, சலுகை பெற முயன்றோம். (திவான் வீட்டு விருந்தினர் என்று சொன்னால் உடனே விடுவார்கள் என்பதற்காக சொன்னோம்)
செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை
அதற்கு நம்பூதிரி திவான் வீட்டிற்கு வந்திருப்பதால்தான் எங்களை கோவிலுக்குள் விட மறுத்ததாகவும் திவான், இந்த வகுப்பாரை செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார்.
ஏனென்றால் அவர் வாணியச் செட்டியார். அவர் சூத்திரர். அவர் திவானாக இருக்கலாம். திவான் என்று சொன்னால் முதலமைச்சர்_பிரதம அமைச்சர் மாதிரி நிருவாகத்தை நடத்தக் கூடியவர். அவர்களுடைய விருந்தினர்கள் இவர்கள். திவான் வீட்டிற்கு வந்ததினாலேதான் விடவில்லை என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றார்.
கோயிலுக்குச் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்
அவர் கீழ் ஜாதிக்காரர். ஆகவே கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார். அண்ணா விடவில்லை. விவாதம் பண்ணுகிறார்கள், நாங்கள் அவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும் எங்கள் ஊரில் கோயிலுக்குள் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் என்று கூறி உள்ளே போக முயன்றோம்.
(அப்படியாவது அனுமதி கிடைக்கும் என்பதற்காக)
அதற்கு நம்பூதிரி, திவான் வீட்டில் விருந்துண்ணும் நீங்கள் அவர் ஜாதி இல்லையானால் அதைவிட மட்டமான ஜாதியாராகத்தான் இருப்பீர்கள்; இருக்க வேண்டும். எனவேதான் அவர் வீட்டில் தங்கினீர்கள் என்று உள்ளே விடவில்லை_ தோழர்களே! ஜாதித் திமிரின் ஜம்பத்தை, மதத்தின் மமதையைப் பாருங்கள்.
அறிஞன் ஆலயம் நுழைய அருகதை....! அரச குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற அறிஞன் ஆலயம் நுழைய அருகதை அற்றவன் என்ன கேவலம்? இத்தகைய இந்து மதம் வேண்டாம் நமக்கு, இவைகளை ஒழிக்க வேண்டாமா? என்று குடந்தையிலே 1945_லே அண்ணா அவர்கள் சொன்னார்.சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) நினைவு நாள் இந்நாள் (1953)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQvi92AlA7na_8jS7OIGzYp4HOY0cZXCrIwJmRb6QIlqOCS7lnd90vhTFTt4RBWcEuYIUVzN15DIQMXNHM3VwjnOgXAqrgXXQ1fEgSfjg3B-rDII1SV8fkZXv5ZIajG5Db1GUfbujjknQ/s400/R.-K.-Shanmukham-Chetty.jpg)
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமை பெற்ற சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1953)
படிக்கும் காலத்திலேயே துடிப்புமிக்க இளைஞர் இவர். 1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் ஓர் அமைப்பினை பார்ப்பனர் அல்லாத அரசு ஊழியர்கள் உருவாக்கினர். இதற்கு முதுகெலும்பாக இருந்து ஊக்குவித்தவர் டாக்டர் சி. நடேசனார். இந்த அமைப்பின் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டாக்டர் நடேசனார் வீட்டில்தான் நடைபெறும். அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் பட்டதாரியாவது என்பது அரிதினும் அரிது. அந்த நிலையில், ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் பார்ப்பனர் அல்லாத இளைஞர்களை வரவேற்றுப் பாராட்டி, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை இந்த அமைப்பு நடத்தி வந்தது. திவான்பகதூர் பி. கேசவப்பிள்ளை தலைமையில் அத்தகு வரவேற்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சர் பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் அப்பொழுது வருகை தந்தனர். பட்டதாரிகள் சார்பாக வரவேற்புக்கு நன்றி கூறி, ஓர் இளைஞர் பேசினார். அவரின் ஆங்கில உரை அனைவரையும் வெகுவாக ஈர்த்துக் கட்டிப் போட்டது. அந்த இளைஞர் வேறு யாருமல்லர் அவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம். சுயரியாதை இயக்கத்தின் நீதிக்கட்சியின் முக்கிய தலைவராகவும் பிற்காலத்தில் ஒளி வீசினார். 1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு இவர் தலைமையில்தான் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்பரான இவர் விடுதலை ஏட்டின் வளர்ச்சிக்குக் கடைசிவரை பொருள் உதவி புரிந்து வந்தார் என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும். அவர் எத்தகைய சுயமரியாதை வீரர் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதும்.
1930 ஆம் ஆண்டு கோவையையடுத்த இருகூரில் உள்ள பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்ப்பதில்லை. கோவை சமூகத் தொண்டு சங்கத்தார் தலையிட்டு சில தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தனர். பார்ப்பனத் தெரு வழியாக அந்தப் பிள்ளைகள் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். உள்ளூர் காவல் துறையும் அவர்களுக்கு உடந்தை! பார்ப்பனர்களின் தூண்டுதலால், ஆர்.கே.எஸ். கட்டி வந்த நூற்பாலைக் கட்டுமானப் பணிக்குப் போகாதபடி ஆள்கள் தடுக்கப்பட்டனர். பார்ப்பனர்களின் சொல்லைக் கேட்டு வேலைக்குப் போகாமல் பட்டினியாகக் கிடக்கப் போகிறீர்களா? இதனால் பார்ப்பனர்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்று எடுத்துச் சொல்லித் தெளிவடைய செய்தார் ஆர்.கே.எஸ். 80 ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டு சமூக நிலை எப்படி இருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பெருந் தனவந்தர்தான் என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கையில் திளைத்த பெருமகன் ஆர்.கே.எஸ். ஆவார்.
கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. ஆர்.கே.எஸ். உருவச் சிலையை கோவையில் இந்தச் சந்தர்ப்பத்தில் அரசு நிறுவுவது பொருத்தமாக இருக்குமே!
ஆர்.கே. சண்முகம் நிதி அமைச்சரான நிலையில், அவர் ஜாதியைக் குறிக்கும் வகையில் (வாணியச் செட்டியார்) செக்குப்படம் போட்டுக் கேலி செய்தது ஆனந்தவிகடன் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.
----------------- மயிலாடன் அவர்கள் 5-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Tuesday, May 4, 2010
சண்முகம் செட்டியார் நினைவு நாள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsWBpagBb2rxSnrpggyNRundAWaVbwbaygLdwF-GwzYn8WlvzMyUXEjTkQATqe5KsUAoA3AdVHPFidIyh9JbrHzrEgYn03EhaaaoKcdLyXuabag4l1WmbKGRoAn7kYfFswWvWBxTPVVqk/s400/TamilnaduVaniyarPeravai-2Bit-03.05+new.jpg)
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள் 5/05/2010 அன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு