Wednesday, October 28, 2009

தினமணியில் ஆர் கே சண்முகம் செட்டியார் புத்தக வெளியீட்டுச் செய்தி

கோவை, அக். 26: இந்தியாவின் வளர்ச்சிக்கு, முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முக்கிய பங்காற்றினார் என சக்தி குழுமங்களின் தலைவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் புகழாரம் சூட்டினார். கோவை தொழில்வர்த்தக சபை அரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆர்.கே.சண்முகம் பற்றிய நூலை வெளியிட்டு அவர் பேசியது: கோவையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த சண்முகம் செட்டியார், முன்னணி தொழில்அதிபர், கோவையை முன்னேற்ற முக்கிய பங்காற்றியவர், நாட்டின் முதல் நிதி அமைச்சர், சிறந்த பொருளாதார மேதை என பன்முகத் தன்மை உடையவராக உயர்ந்தவர்.அருங்காட்சியகம் அமைக்கலாம்: கோவையில் நூற்பாலையை உருவாக்கிய முதல் இந்தியர் அவர் தான். காந்தியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். சென்னை தமிழ்ச் சங்கம், பேரூர் தமிழ் கல்லூரி உள்ளிட்டவற்றை உருவாக்க முக்கிய பங்காற்றினார். பொருளாதாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த பலமுறை வெளிநாடு சென்றுள்ளார். அவரது நினைவாக கோவையில் ஏதாவது முக்கிய இடத்தில் அருங்காட்சியகம், நூலகம் அமைக்க தொழில்அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். சண்முகம் செட்டியாரின் பேரன் ஆர்.சுந்தர்ராஜ் அவிநாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால், சண்முகம் செட்டியார் எழுதிய 40 ஆயிரம் கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தில்லியில் உள்ள தேசிய ஆய்வுக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதை மையமாக வைத்து பல வெளிநாட்டு மாணவ, மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக தொழில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதில் தலைவராக இருந்த சண்முகம் செட்டியார், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கைப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்தியா பலதுறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2-வது உலக தமிழ் மாநாடு சென்னையில் நடக்கும்போது அவருக்கு சிலை வைக்க அண்ணா முயற்சி எடுத்தார். ஆனால், சிலரின் தவறான ஆலோசனையால் அது கைவிடப்பட்டது. கோவையில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடைபெறும் நிலையில் இங்கு சிலை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்திய தொழில்வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் மகேந்திரா ராம்தாஸ், செயலர் டி.நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
நன்றி-

Tuesday, October 27, 2009

ஆர்.கே.எஸ் புத்தக வெளியீட்டு விழா




‘Creator of Prosperity’ Dr. N. Mahalingam releases the book
on Sir R K Shanmugam Chetty. Our President Mr. Mahendra Ramdas receives the copy.
Author of the book Mr. R. Sundarraj (L) and our Hon. Secretary Mr. D. Nandakumar (R) is also seen.

டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை திரு.ஆர் சுந்தரராஜன் அவர்கள் எழுதியுள்ளார்கள்.அதன் முதல் பிரதி கோவை வர்த்தக மையத்தில் 26-10-2009 அன்று அருட்செல்வர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை குறுகிய காலத்தில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கு VYWA வின் வாழ்த்துக்கள்.

Saturday, October 17, 2009

விடுதலை நாளேட்டில் ஆர்.கே.எஸ்.

ஒற்றைப்பத்தி

ஆர்.கே.எஸ்.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இன்று (1892). சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1931 இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநில சுயமரி-யாதை மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர். இவர் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர். அம்மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்-கப்பட்டார்.

காந்தியாரோடு ஒருமுறை இவர் உரையாடிக் கொண்டி-ருந்தபோது, ஆர்.கே.எஸ். அவர்களிடம் தெறித்த தனித்தன்மையான சீர்திருத்த கருத்துகளைச் செவியுற்ற காந்தியார் இந்த விஷயத்தில் தங்களுக்குக் குருநாதர் யாராவது உண்டா? என்ற கேள்-வியைக் கேட்டபோது, ஆம், எனது குருநாதர் ஈரோடு ஈ.வெ. ராமசாமியார்தான் என்று கூறியுள்ளார். அவரைச் சந்திக்கவேண்டும் என்று காந்தியார் விரும்பினார் 1927 இல் பெரியார் காந்தியார் சந்திப்பு பெங்களூரில் நடந்தது_ அதன் தொடர்ச்சிதான்.

விடுதலை ஏடு பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போதெல்லாம் தொடர்ந்து அதன் வாழ்வுக்கு நிதி உதவி செய்து வந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார்கள். (தமிழர்கள் நன்றி உணர்வோடு நினைவு கூர்வார்களாக!)

அந்த விளையும் பயிர் முளையில் தெரிந்தது. சென்னையில் கல்லூரிகளில் படித்தபோது அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசைத் தட்டி செல்பவராக ஆர்.கே.எஸ். இருந்தார்.

1913 இல் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் திராவிடர் சங்கம் நடத்தி வந்தார். வருடந்தோறும் பட்டதாரிகளாக வெளிவரும் பார்ப்பனர் அல்லாதாரை அழைத்துப் பாராட்டுக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அப்படி ஒருமுறை அங்கே வந்து, பட்டதாரிகள் சார்பில் நன்றி தெரிவித்து, ஆங்கிலத்தில் ஆற்றிய உரையால் அனைவரையும் ஒரே மூச்சில் கவர்ந்து ஈர்த்தவர் ஆர்.கே. சண்முகம். அந்தக் கூட்டத்தில் வெள்ளுடை வேந்தர் சர்.பி. தியாகராயர், பனகல் அரசர் போன்றவர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி-யிட்டு வெற்றியையும் ஈட்டினார். சட்டமன்றத்தின் 127 உறுப்பினர்களுள் மிகவும் இளையோராக இருந்தவர் சண்முகம்தான். அப்போது நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். அதன்பின் மத்திய (டெல்லி) சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் (1923). மத்திய சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், தந்த புள்ளி விவரங்கள் அகில இந்திய அளவில் அகல விரிந்து அவரைப் பார்க்கும்படிச் செய்தன.

இந்திய அளவிலும், உலக அளவிலும் அவர் பெயர் பரவியிருந்தது என்பது உண்மைதான் என்றாலும், அடிப்படையில் ஆர்.கே. சண்முகனார் அழுத்தமான சுயமரியாதைக்காரர் ஆவார்.

பிராமணியச் சடங்கை விலக்கியவர்கள் என்ற ஒரு பட்டியல் குடிஅரசில் வெளி-வந்தது. (1) ஈ.வெ. ராமசாமி (2) திரு.வி.கலியாணசுந்தரம் (3) டாக்டர் பி. வரதராசுலு (4) ஆர்.கே. சண்முகம்.

இந்த அடையாளம் போதுமே!

நன்றி!-விடுதலை. - மயிலாடன்


தினமலரில் ஆர்.கே.எஸ்.பிறந்தநாள் செய்தி.





Wednesday, October 14, 2009

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா


டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 118 வது பிறந்தநாள் விழா 17-10-09அன்று காலை 9-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு அண்ணாமலைபல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் .S.V.சிட்டிபாபு மற்றும்,தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் R.பன்னீர்செல்வம், வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்VYWA தலைவர்.K.மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.வாணியர் குலமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, October 7, 2009

கீழப்பாவூர்-காந்தி ஜெயந்தி விழா


கீழப்பாவூர் வாணியர் சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைவர் திரு.S.பண்டாரம் செட்டியார்,செயலாளர் திரு.எஸ்.சுந்தரராஜன் செட்டியார்,டிரஸ்டி திரு.தனுஷ்கோடி செட்டியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு
நம் வாணியர் குல மாணிக்கம் மகாத்மா காந்தியடிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விழாவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழஙக‌ப்பட்டது





Tuesday, October 6, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா


வாணியர் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்திஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.நம் சமூகப் பெருந்தலைவர் வி.தண்டபாணி செட்டியார்,கௌரவத்தலைவர் ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,சங்கத்தலைவர் கே.மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் ,சமூக மக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.