Saturday, June 30, 2012
Thursday, June 7, 2012
வணிக வைசிய நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா
3-6-2012 அன்று நடைபெற்ற திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்களின் முத்துவிழாவை முன்னிட்டு வணிக வைசிய நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.நூலினை டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு M.A.B.T.D.Litt., அவர்கள் வெளியிட திரு எல்.பழமலை IAS.அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள்.திரு.மா.கோடிலிங்கம்அவர்கள் இறைவணக்கம் பாடி மகிழ்வித்தார்கள்.நல்லாசிரியர்.எம்.சிவகுருநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.புலவர்.பொன்னரசன்,அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் திரு.கோ.செல்வம் ,புலவர் எல்.கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,உயர்திரு வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த விழா மதிய உணவுடன் சிறப்பாக நிறைவுற்றது.
. திரு எல். பழமலை ஐ.ஏ.எஸ்.அவர்கள் வாழ்த்துரை
டாக்டர் .எஸ்.வி.எஸ் அவர்களுக்கு தலைவர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் பொன்னாடை அணிவிக்க சங்க பொருளாளர் திரு ஆர்.சண்முகம் செட்டியார் அவர்கள் கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.
திரு.மா.கோடிலிங்கம் அவர்கள் இறைவணக்கம்
திரு.எம்.சிவகுருநாதன் அவர்கள் வரவேற்புரை - டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு M.A.B.T.D.Litt., அவர்கள் நூலினை வெளியிட திரு. எல்.பழமலை IAS.அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள்.
அனைத்து செட்டியார் முன்னேற்றப் பேரவை தலைவர் திரு கே.சி.அருணாசலம் செட்டியார் நூலினைப் பெற்றுக்கொள்கிறார்.
திரு.கோ.செல்வம் அவர்களுக்கு திரு.R. சண்முகம் செட்டியார்,T.S.சிவலிங்கம் ஆகியோர் மரியாதை செய்கின்றனர்.
புலவர் பொன்னரசன் அவர்களுக்கு மரியாதை
புலவர்.எல்.கேசவன் அவர்களுக்கு மரியாதை.
Monday, June 4, 2012
சென்னை வணிக வைசிய கல்யாண மண்டப நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
5-6-2012 அன்று மண்டப அரங்கத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் முதுபெரும் தலைவர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் மீண்டும் தலைவராகவும் .திரு பி.என்.முத்துகுமரன் செட்டியார் அவர்கள் மீண்டும் செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர் .பொருளாளராக திரு.ஆர்.சண்முகம் செட்டியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
Saturday, June 2, 2012
அன்புடையீர் வணக்கம்!
தென்னிந்திய வாணியர் சங்க முன்னாள் தலைவரும் ,சென்னை வணிக வைசிய கல்யாண மண்டபத்தின் தலைவரும்,சென்னை குமரக்கோட்டம் அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் தக்கார் திரு வீ.தண்டபாணி செட்டியார் அவர்களின் 80 வது வயது முத்துவிழாவை முன்னிட்டு முனைவர் செல்வ கணபதி அவர்கள் எழுதிய வணிக வைசிய நவரத்தினங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா 3/06/2012 அன்று காலை 10-00 மணிக்கு ,எண்113,பவழக்காரத்தெரு,மண்ணடி, சென்னை-1 enra விலாசத்தில் நடைபெறும்.மேலும் விவரம் அழைப்பிதழில்.அழைபிதழ் இணைக்கப்பட்டுள்ளது அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம் .நன்றி!
Subscribe to:
Posts (Atom)