தென்னாட்டுத் தாகூர் என்றும், திராவிட மணி என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடஞ் சூட்டப்பட்ட ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1892).
பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு -அதற்குமேல் சட்டப் படிப்பு, மாணவர் பருவத்திலேயே சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல், பேச்சுப் போட்டி களில் முதல் பரிசு இவை எல்லாமே வளரும் பருவத் தில் ஆர்.கே.எஸ். அவர் களிடத்தில் குடி கொண்டு விட்டன.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக் குண்டு. கொச்சியின் திவா னாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர் ஒளி வீசினார்.
இந்தச் சிறப்புகளைவிட தந்தை பெரியார் அவர் களின் தன்மான இயக்கத் தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவர்தம் பெருமை மகுடத்தில் என் றும் ஒளிதரும் அத்தியாயம் ஆகும்.
1930ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாட்டின் வர வேற்புக் குழுத் தலைவராக இருந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார். வரவேற்புக்குழு தலை வர் என்கிற முறையில் அவர் ஆற்றிய உரையில் மின்னித் தெறித்தவை - அவரின் கொள்கைச் சான்றாண்மைக்கான ஆவணமாகும்.
சுயமரியாதை, ஒவ் வொருவருக்கும் தனிப் பெரும் சொத்து. சுயமரி யாதை இயக்கம்தான் மக் களின் சிந்தனா சக்தியை வளர்த்திருக்கிறது. மந்தி ரங்களையும், பாராயணத் தையும், ஜபமாலையை உருட்டுவதையும் விட்டு விட்டு,
கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் கோ யிலின் மூலையில் அமர்ந்து யாரைத் துதிக்கிறாய்?
கண்களைத் திற! உனது கடவுள் உனக்கு முன்னால் இல்லை என்ப தைப் பார்! என்று கூறிய ரவீந்திர நாத் தாகூர் நாத்திகரா? என்று பேசிய வர் சண்முகனார்.
1931ஆம் ஆண்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுய மரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவரும் சண்முகனாரே ஆவார்.
1.8.1927 குடிஅரசு இதழில் நால்வர் சந்திப்பு என்ற தலைப்பில், இராம சாமி நாயக்கர், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டி யார் ஆகிய நால்வரும் சென்னையில் கூடிப் பேசியபோது, அரசியலைப் பொறுத்தவரை தங்களி டையே கருத்து வேறுபாடு இருந்தாலும், சமுதாய சம்பந்தமான எல்லாக் காரியங்களிலும் ஒன்றாக இருந்து வேலை செய்வ தெனத் தீர்மானித்துக் கொண்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அந்த இனவுணர்வு வெல்லட்டும்!
- மயிலாடன்
நன்றி!-விடுதலை
No comments:
Post a Comment