தலைமைச்செயலகம்,
சென்னை.
அன்புள்ள முத்தமிழ்க் காவலர் முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
உலக செம்மொழி மாநாட்டை மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து நொடிக்கு நொடி விழாவை சிறப்புற நடத்த தாங்கள் எடுத்துவரும் முயற்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.பெரியாரின் அடிச்சுவட்டில் நடந்துவரும் தாங்கள் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் தாங்கள் மனது வைத்தால் காலத்தால் அழிக்க முடியாத மற்றொரு சாதனையை செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.என்னவென்றால் கோவை மாநாட்டில்,பெரியாரின் நெருங்கிய நண்பரும் ,தமிழ் இசைக்காக தமிழ் இசைச் சங்கம் தோற்றுவித்த கோவையில் பிறந்த டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் திருவுருவச் சிலையை நிறுவவும் ,சிறப்பு தபால் தலையை வெளியிடவும், தங்களின் மகிழ்ச்சியான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிவிக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் நன்றியுடன்,
P.தர்மலிங்கம்
செயலாளர்,
வாணியர் இளைஞர் நலச் சங்கம்
No comments:
Post a Comment