Monday, April 26, 2010

இரங்கல் செய்தி

மேலேயுள்ள படத்தில் வாழ்த்துரை வழங்கும் - திருமயிலை வாணியர் சங்கத்தின் முக்கிய தலைவராய் இருந்தவரும்,தென்னிந்திய வாணியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,சென்னை குமரக்கோட்டம் சேவார்த்திகள் சங்கத்தின் பொருளாளரும்,SIVET கல்லூரியின் பொருளாளராக இருந்து பணியாற்றியவரும் ,சென்னை காஞ்சிபுரம் வணிக வைசிய சங்கத்தின் தலைவருமான திரு.M. சம்பந்தம் செட்டியார் அவர்கள் 24-04-2010 அன்று காலை 9-30 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடனும்,மன வேதனையுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனெனில் அவர்கள் குடும்பம் நம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் கணக்கில் அடங்காதது.நம்முடைய சங்கத்தின்பால் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.அவருடைய இழப்பு நம்முடைய சமூகத்துக்கும்,அவருடைய குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்.அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

Tuesday, April 6, 2010

"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை


நம் வாணியர் குல திலகம் ,இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -ராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
6000 வது இன்னிசை நிகழ்ச்சி வரும் 8-04-2010வியாழனன்று மாலை 6-30 மணிக்கு ராணி சீதை ஹாலில் டைபெறும் .வாணியர் பெருமக்கள் அனைவரும் .விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.