Saturday, July 12, 2008

R K Sஅவர்களின் நினைவுகள்


வணக்கம்.நம் வாணியர் இளைஞர் நலச் சங்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று நம்முடைய சமூகத்தின் வளர்ச்சிககாக பாடுபட்ட தலைவர்களை பெருமைபடுத்தி தற்கால தலைமுறையினருக்கு விளங்கவைத்தல்.அந்த வகையில் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின்,தபால் தலை வெளியிடுவதில் முன் முயற்சி எடுத்து வருகிறது.ஆர்.கே.எஸ்.மிகச்சிறந்த பொருளாதார மாமேதை.ஆங்கிலேயர்களாலேயே பாராட்டு பெற்றவர்.
காந்தியடிகள்,பெரியார்,தாகூர் போன்றோருடன் நெருங்கிப்பழகியவர்.சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்.ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, போராடியவர்.சென்னையில் தமிழ் சங்கம் அமைக்க திரு.அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து வெற்றி கண்டார்.
ஆனந்த விகடனிலும் கட்டுரை எழுதியுள்ளார்.இந்தியாவில் பல தலைவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளன.சிறு வயது முதலே நாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின்,தபால் தலை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பல பிரிவுகளிலும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.அவர்கள் R K S -ன் வாரிசுகளைப் பற்றிய விவரங்களை கேட்டுள்ளார்கள்.அவர் கோவையில் பிறந்து வளர்ந்த இடம் உள்ளது. எனவே அவரை பற்றிய விவரங்களை சேகரித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
R K Sஅவர்களின் நினைவுகள் சில.








Thursday, July 3, 2008

வாணியர்.காம் இணையதளத்துக்கு வாழ்த்துக்கள்.

vaniyar.com (வாணியர்.காம்) என்ற புதிய இணையதளம் துவக்கப்படுள்ளது.வாணியர் பேரவை தலைவர் திரு.ஆர். பன்னீர் செல்வம் அவர்களுக்கும்,பொதுச்செயலாளர் திரு.S.ராஜேந்திரன் அவர்களுக்கும் நம் வாணியர் இளைஞர் நலச் சங்கத்தின்(VYWA-வின்)வாழ்த்துக்கள்!