பல்வேறு பகுதிகளில் தமிழர்களை சீண்டி வேடிக்கை பார்க்கும் நிலை ஒழிந்து , வரும் தை முதல் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! -- P.தர்மலிங்கம்

தமிழர்கள் என்றென் றைக்கும் பெருமைப்படத்தக்க புதல்வர்கள் பலர் உண்டு அதில் குறிப்பிடத்தக்கவர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டி யார்! அவரின் பிறந்த நாள் இந்நாள் (1892).
சென்னை சட்டமன்ற உறுப்பினர், டில்லி அசம்பிளி உறுப்பினர், டில்லி அசம்பிளி யின் தலைவர் (சபாநாயகர்), கொச்சியின் திவான், இந்தி யாவின் முதல் நிதி அமைச் சர், அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்ற அணி கலன்கள் சூட்டப் பெற்ற அரும் பெரும் தமிழர் இவர்.
1932இல் கனடா நாட்டின் ஒட்டவாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் இந்தியத் தூதுக் குழுவின் தலைவர், 1938இல் ஜினிவா வில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியத் தூதுக் குழுவின் உறுப்பினர், 1941-42இல் அமெரிக்காவில் யுத்த தளவாடங்கள் வாங்க அனுப்பப்பட்ட இந்திய அரசின் தூதுக் குழுவின் தலைவர், இன்னும் இதுபோன்ற எத் தனையோ பதவிகளைப் பெற்றவர் என்பதைவிட, இந்தத் தமிழ்ப் பெருமகனால் அந்தப் பதவிகள் ஒளி வீசின!
மற்ற மற்ற துறைகளுக் கான அமைச்சர்களின் பட்டியல் தயாராகி விட்டது - நிதித் துறையைத் தவிர; கடைசியில் ஆர்.கே. சண் முகம்தான் மிகவும் பொருத் தமானவர் என்று முடிவு செய்யப்பட்டது. காந்தியார் அவர்களின் ஆதரவும் இருந்தது. இவ்வளவுக்கும் ஆர்.கே.எஸ். காங்கிரஸ்காரர் அல்லர்; அதையும் தாண்டி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றால், அங்குதான் ஆர்.கே.எஸ். அவர்களின் தனித் திறன் ஜொலிக்கிறது.
டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ்காரர் அல்லர்; அவர்தான் சட்ட அமைச்ச ராக நேரு அமைச்சரவையில் ஒளி வீசினார்.
இந்தச் சிறப்புகள் ஒரு புறம். அவரது இன்னொரு பக்கம் அடிப்படையில் சுய மரியாதை இயக்கத்தவர் - பார்ப்பனர் அல்லாதார் உணர் வில் ஓங்கி வளர்ந்தவர்.
1930இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டின் தலைவர் ஆர்.கே.எஸ். தான். தமிழி சையை வளர்த்ததில் அவருக்குரிய பங்களிப்பு சாதாரணமானதல்ல.
ஆர்.கே.எஸின் சீர்தி ருத்த உணர்வைக் கண்டு காந்தியாரே, இதில் உமக்குக் குருநாதர் யார் என்று கேட்டபோது, ஈ.வெ.ரா.தான் என்று கூறி இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் தந்தை பெரியார் - காந்தியார் சந்திப்பு 1927இல் பெங் களூரில் நடைபெற்றது.
1.8.1937இல் குடிஅரசு இதழில் நால்வர் சந்திப்பு என்ற தலைப்பில் ஒரு சேதி; இராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டி யார் நால்வரும் சென்னையில் கூடிப் பேசியபோது, அரசி யலைப் பொறுத்தவரையில் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒன்று சேர்ந்து வேலை செய்யாமல் போய் விட்டாலும், சமுதாய சம்பந்த மான எல்லாக் காரியங் களிலும் இனி ஒன்றாயிருந்து வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண் டனர்.
அடுத்த வாரக் குடி அரசில் நமது குறிக்கோள் என்ற தலைப்பில் பிராமணீ யத்தை வெறுப்பவர்கள் தங்கள் பெயரை அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. அதன்படி வரவும் தொடங் கிற்று. இத்தகைய சுயமரியா தைச் சுடர் 61 வயதிலேயே அணைந்து விட்டதே!
வாழ்க ஆர்.கே.எஸ்.!
-மயிலாடன்


டாக்டர் ஆர் கே சண்முகனார் அவர்களின் 120 வது பிறந்தநாள் வரும் அக்டோபர் 17 ம் தேதி அன்று வருகிற வேளையில் தமிழ்நாட்டின் தமிழனின் மரபினைக் காத்த ஆர் கே எஸ் போன்றோரின் வழிகாட்டுதலை இந்த நேரத்தில் பழநெடுமாறன் விளக்கியிருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது ஆகும்.ஆர் கே எஸ் பொதுமக்களுக்கு சேரவேண்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து சென்றபோது அதனை பிரிட்டிஷ் அரசிடம் நேரடியாகசென்று வாதாடி இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.அந்தப் போராட்டம் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது ஆச்சர்யம்தான்.அந்த காலகட்டத்தில் இந்தியா மிகவும் வறுமைனாலும் பசி பட்டினியாலும் வாடிக் கொடிருந்த நேரம் . இதனை விவசாய நிபுணர் எம் எஸ் சுவாமிநாதனும் பலமுறை கூறியுள்ளார்.அந்த நேரத்தில் பொருத்தமான நிதியமைச்சர் ஆர் கே எஸ் தான் என்று மகாத்மா காந்தியால் மகுடம் சூட்டப் பெற்றவர் ஆர் கே சண்முகனார்.ஆனால் அவருக்குப் பிறகு அவர் பெயரை கூறக்கூட தகுதியில்லாதவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். 
1944 ம் வருடம் நடந்த பிரிட்டன்வுட்ஸ் மாநாட்டின் பொது உலக அறிஞர்களுடன் ஆர்.கே எஸ்
சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் நேற்று காலை சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.முதல்-அமைச்சர் கருணாநிதி விழாவில் பங்கேற்று தேசிய கொடி ஏற்றிவைத்தார்.
சென்னை திருவல்லிக்கேணி லோகாம்மாள் அறக்கட்டளை மற்றும் VYWA வின் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.அண்ணல் காந்தியடிகள் மற்றும் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் உருவபடத்தினை திறந்துவைத்து தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு வைத்து தீப ஆராதனை நடத்தி பெரியோர்களால் தேசியக் கோடி ஏற்றிவைக்கப்பட்டது.அனைவரும் தேசியகீதம் பாடியும்,வந்தேமாதரம் முழக்கமிட்டும் தேச ஒற்றுமைக்கு குரல் கொடுத்தனர் .அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

லோகாம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள்.



இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு,
சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன்.
செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு;
செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த
வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய்.
இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத
காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன
வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.
| |||||||||